செவ்வாய், மே 08, 2012

விவாதம் - கவிதையும் புறச்சூழலும்


றியாஸ் குரானா, சாஹிப்கிரான் கவிதை தொகுப்பு விமர்சன அரங்கின் போதான சில விவாத துளிகள்...

by Thiru Ji on Tuesday, April 10, 2012 at 6:25pm ·
* தக்கை விமர்சன அரங்கில் நடந்ததை போலவே விவாதத்தை பா.வெங்கடேசன் துவக்கி வைக்க ஆதவன் தீட்சண்யா முடித்து வைக்கும் படலம் தொடர்ந்தது... அன்றைக்கு எல்லா விவாதத்திலும் உற்சாகமாக பங்கேற்று மேற்கொண்டு விவாத பொருளை முன்னெடுத்து சென்ற யவனிகா ஸ்ரீராம் மிஸ்ஸிங். தக்கை கூட்டத்தை போலவே மிக நிறைவாக முடிந்தது. விவாதத்தின் சில முக்கிய துளிகள்.

* வா.மணிகண்டனின் உரை தேர்ந்த வாசிப்பனுபவத்தை உணர்த்துவதாக இருந்தது. றியாஸ் கையாண்டிருக்கும் poetry technologies பற்றிய தன் உரையை தொடங்கும் முன், சமீப கால கவிதை உலகில் மிகப்பெரும் வீச்சை ஏற்படுத்திய கவிதை தொகுப்புகளை வெளியிட்ட "புது எழுத்து" க்கும், அதன் ஆசிரியர் மனோன்மனிக்கும், நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

* ஆதவன் தீட்சண்யாவின் றியாஸ் குரானாவின் கவிதை தொகுப்பின் மீது அவர் வைத்த பார்வை தான் விவாதத்தின் பெரும்பான்மையான எரிபொருளை நிரப்பியது.

*அவர் முன்வைத்த கருத்து. "இந்தியாவில் ஒருவன் எந்த வித அரசியல் சார்பும், புறச்சூழலின் எந்த பாதிப்பும் இல்லாமல் ஒருவன் வாழ்ந்துவிட முடியும். ஆனால் றியாஸ் ஈழத்தில் வாழ்பவர். அங்கே எந்த ஒரு மர மட்டையும் புறச்சூழல்களின் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்துவிட முடியாது. அப்படி வலியும் வேதனையுமான ஒரு அசாதரணமா சூழலில் வாழ்ந்த றியாஸ் என்ற படைப்பாளியின் இந்த தொகுப்பில் அப்படியான புறவழிபாதிப்புகள் இந்த படைப்பில் இல்லை. தான் வாழும் காலத்தை இந்த கவிதைகள் பிரதிபலிக்கவில்லை. படைப்பாளி என்பவன் தான் வாழும் காலத்தை பிரதிபலிக்கவேண்டும். அது இதில் மிஸ்ஸிங். 50 ஆண்டுகள் கழித்து ஒரு கவிதையை வாசிப்பவன் இந்த கவிதைக்கான காலநிலை இல்லாமல் வாசிக்கப்படும்போது அது வெறும் சாதாரண பிரதியாகத்தான் இருக்கும்" என்கிற அர்த்தத்தில் பேசி முடித்தார். இதை பா.வெங்கடேசன் வரவேற்றார்.

* இதற்க்கு பீர் முஹம்மது கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து. சில கவிதைகளை மேற்கோள் காட்டினார். விவாதம் மேற்கொண்டு தொடர்ந்தது.

* அப்போது குறுக்கிட்ட கவிஞர் பத்மபாரதி(சிவா), றியாஸின் கவிதைகள் காலத்தை பிரதிபலிக்கவில்லை என்றாலும், அவரின் கவிதைகள் பேசும் மொழியாடல்களும், கட்டுடைக்கும் போக்குகளும், மணிகண்டன் மேற்கோள் காட்டிய எதிர்பாரதன்மைகளாலுமே இந்த கவிதைகள் நிலை பெற்று நிற்கும், இந்த கவிதைகள் நிலைபெற இவற்றின் மொழியே போதுமானது என்று ஒரு நீண்ட கவிதையை வாசித்தார்.

* அதற்கு ப.வெங்கடேசன் மொழி மட்டுமே கவிதை ஆகாது, ஒரு படைப்பாளி நிச்சயம் காலத்தை முன் நிறுத்தத்தான் வேண்டும். ஒரு படைப்பாளி எழுதி தான் காலத்தை கடக்கிறான். அவன் வாழும் காலத்தை பதிவு செய்யவேண்டும் என்று விவாதிக்கும் பொழுது. authors death பற்றி பேசி முத்தாய்ப்பாக முடித்தார். ஒரு படைப்பாளி தன் படைப்பை முடிக்கும் போது வாசகனாகவும் தன் படைப்பை பூர்த்தி செய்து சீல் வைக்கவேண்டும். அப்படி வரும் படைப்புகள் தான் வாசக பிரதியாகிறது. மற்றவை வெறும் பிரதிகளாக கடந்து செல்கிறது.

* சாகிப்பின் கவிதைகள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் பேசிய நண்பர்கள். இவரின் கவிதைகள் அது எழுதப்பட்ட காலத்திலேயே தொகுப்பாக வந்திருக்கவேண்டியவை. இப்போது இது சற்றே பழையதாகிவிட்டதாக தெரிவித்தார்கள். இது ஐந்தாடுகளுக்கு முன்பே வந்திருக்கவேண்டிய முக்கியமான படைப்பு. இந்த பிரச்னை கவிதைக்கு தான் இருக்கிறது, கதைகளுக்கு இல்லை என்றார் பா.வெங்கடேசன். இதே ஆபத்து வே.பாபுக்கும் இருப்பதாக ஆதவன் கவலையோடு தெரிவித்தார்.

* பின் விவாதம், புத்தகமாகும் சிரமங்கள்,  பதிப்பக துறையின் சிக்கல்கள் பக்கம் தாவியது. மனோன்மணியம் அவர் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும், வியாபாரமாகிவிட்ட இலக்கியம் குறித்தும், கவிதை நுல்களின் தேக்கம் குறித்தும் பேசினார்.

*எந்த பதிப்பகமும் இப்போதெல்லாம் கவிதை தொகுப்பை போட முன்வருவதில்லை என்று தொடர்ந்த விவாதம் இப்போதெல்லாம், ஒரு கவிதை தொகுப்பு 50 பிரதிகள் தான் அச்சிடுகிறார்கள். பின் அதன் விற்பனையை பார்த்து தான் மேற்கொண்டு அச்சிடுகிறார்கள் என்று மனோன்மணி பகிர்ந்துகொண்டபோது, ஒரு வித சோக ரேகை அறையை கவ்வியது. தூரன் குணா தன் கவிதை தொகுப்பிற்கு எழுதிய அஞ்சலி குறிப்பு ஏனோ நினைவுக்கு வந்தது...

* விவாதங்கள் மனதில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஸ்ரீநியை சந்திக்கும் போது மீண்டும் தொடரும். பாலா, குணா கலந்துகொள்ளாதது இழப்பு தான். வேறொரு shade கிடைத்திருக்கும்.

* நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததோடு  நின்று விடாமல், அதை முகநூல் நண்பர்களுக்கு பகிரும் வண்ணம் என்னை எழுதவைத்த பெரியசாமிக்கு நன்றி.

நிகழ்வின் புகைப்பட தொகுப்பு : http://www.facebook.com/media/set/?set=a.417737164907891.112866.100000148341466&type=1
 ·  ·  · Share
  • You, Hari KumarDaniel JamesGeorge Singarajah and 17 others like this.
  • 3 shares
    • Ram Chinnappayal Thiru Ji நல்ல தொகுப்பு..மணிகண்டன் நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்தார் என் நினைக்கிறேன்.. பகிர்ந்து கொண்டாரென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

      தோழர் பெரியசாமி என்னிடமும் கேட்டுகொண்டார் நிகழ்ச்சியைப்பற்றி எழுத ...:-)))))
      April 10 at 6:45pm ·  ·  2
    • Sivakumar Padmanabhan kachidhamaana padhivu thiru. koottathil mownamaaga irunthaalthaan ippadiyoru kachidham koodivarumpola. :-) vannachidhavu kuritha sambu, samayvel katturaigal, vaasithu unarappadaveandiya thoguppaga sahibkiran thoguppai kurippittana. vannachidhavudan andharangamaana snehaththudan irukkirean.
      April 10 at 9:54pm ·  ·  2
    • Sivakumar Padmanabhan padhividalukku nandri.
      April 10 at 9:55pm ·  ·  1
    • Periyasamy Periyasamynatarajan நல்ல கவனிப்போடு இருந்திருக்கிறீங்க திரு.
      சிவா கூறியதுபோல வண்ணச்சிதைவு வாசித்து உணரப்படவேண்டிய தொகுப்பு. சமயவேல் சம்பு கட்டுரைகளின் பதிவு வண்ணச்சிதைவு தொகுப்பை மிக நெருக்கமாக உணரச் செய்கிறது.
      'சாகிப்கிரானுக்கு எல்லாவற்றையும் மௌனமாய் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எப்படிக் கிடைத்ததெனத் தெரியவில்லை. ஒரு கவிதையில் எப்பொழுதுமே முழுதும் பார்க்க முடியாத நிலவு பற்றி எழுத நேர்ந்துவிட்டது பற்றி இவரால் வருத்தம் கொள்ள மட்டுமே முடிகிறது. அன்பின் கோரைப் பற்களில் ஒன்று உடைந்திருப்பது தெரிந்திருப்பினும் அந்தப் பில்லியை இவர் நேசிக்கவே முடிகிறது. "வெறுமையைக் காய்க்கிற தாவரம் கல்மரம்" என்று போகிற போக்கில் எழுதிச் செல்கிறார் எதன் மீதுமான அதீத பற்றுதலோ ரொமாண்டிசமோ கூட அற்ற சாகிப்கிரானின் குரல் தமிழில் இன்னும் பதியப்படாத ஒரு அசலான பௌத்தக் குரலாக இருக்கிறது.' என சமயவேல் கூறியுள்ளதை நினைவுகொள்ள வேண்டியிருக்கிறது.
      April 10 at 10:20pm ·  ·  6
    • Riyas Qurana புறச் சூழலை ஒரு இலக்கியப் பிரதி , பிரதிபலிக்க வேண்டும் என்பது அரிஸ்டோட்டிலின் காலப் புதுமையானது. ஆனால், இன்றைய பின் நவீன உலகிலும் அதைக் கொண்டாடுகிறதா தமிழ்ச் சூழல்...?
      அரிஸ்டோட்டிலின் கருத்துக்கு இன்னும் தமிழ்ச் சூழலில் கவர்ச்சி இருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது.
      April 10 at 11:43pm ·  ·  4
    • Riyas Qurana புறச் சூழலைப் பிரதிபலிக்க வேண்டுமென்று கவிதையை கட்டாயப்படுத்த முடியுமா...?
      அல்லது பிரதிபலிக்க வேண்டுமென்று கவிதையைப் பணிக்க முடியுமா..?
      இது புறச் சூழலைப் பிரதிபலிப்பதே கவிதையின் முக்கிய பணி அதைச் செய்வதற்குத் தவறிவிட்டது என குற்றஞ்சாட்டுவதை பரிதாபத்தோடு பார்க்கவே நான் விரும்புகிறேன்.
      இலக்கியப் பிரதிகள் தமக்கான (எல்லாப் பிரதிகளும்) சூழலை உருவாக்குகின்றன என்றே நான் கருதுகிறேன்.
      April 10 at 11:51pm ·  ·  3
    • Peaikaaman Kaaman 
      புறச்சூழல்களை கவிதையில் கட்டாயப்படுத்தி திணிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை , ஆனால் ஒரு நல்ல கவிதையின் உருவாக்கத்தில் புறச்சூழல் தன்னியல்பாகவே தனக்கான இடத்தைப் பிடித்துக் கொள்ளும் .புறச்சூழல்களும் ,அவற்றிற்கான தடயங்களும் தான் ஒரு வாசகனை படைப்பிற்குள் நுழைய அனுமதிக்கின்ற சாவிகள் .மேலும் புறச்சூழல்கள் தான் ஒரு படைப்பாளனின் துலங்களுக்கான தூண்டல்களையும் தருகின்றன .புறச்சூழல்களை புறக்கணித்துவிட்ட ஒன்று தன்னை படைப்பென்று கூறிக்கொண்டால் அது சந்தேகத்திற்கு இடமான ஒன்றே . . || இலக்கியப் பிரதிகள் தமக்கான (எல்லாப் பிரதிகளும்) சூழலை உருவாக்குகின்றன என்றே நான் கருதுகிறேன்.|| ஆதவன் தீட்சண்யாவும் ,ப. வெங்கடேசனும் பிரதிக்கான மூலம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் .நீங்கள் பிரதியாகிவிட்ட ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்
      இது பின் நவீன உலகென்று தங்களின் ( ரியாசின்) மூலமாகவே தெரிந்து கொண்டேன் .நன்றி நண்பரே .
      April 11 at 7:15am ·  ·  3
    • Shankar Krishnan i ask 1thing here. a gud poem doens't need to justify itself ovr its compliance over inner r outer r social things.. it kn b any f d way. bt wr its beauty lies is d presentation n its ability to mk a prsn to realiz its content n he has feel it.. i don hv a tamil software so pls pardon me fr writing n english..
      April 11 at 8:11am ·  ·  1
    • Shankar Krishnan I accept Riyas perception ovr d poetry and I like it..
    • Isai Karukkal nalla pathivu..
      April 11 at 8:17am ·  ·  2
    • Ganesa Kumaran வெல்டன் திரு...
      April 11 at 1:27pm ·  ·  1
    • Riyas Qurana 
      Peaikaaman Kaaman @பறவை ஒன்று பறக்கிறது என்பதும் புறச்சூழல் நிகழ்வுதான் தோழர். அவர்களின் விமர்சனத்திலிருக்கும் குறிப்பீடு குறித்த சாய்வுடைய அரசியல் பார்வை.அதை கவிதை பிரதிபலிக்கவில்லை என்பதே.மய்யநீரோட்ட அரசியலைக் கடந்த நிலையிலும் நுண் அரசியல்கள் பல தளங்களிலும் இயங்குகிறது. அவைகளை அக்கரைகொள்வதை அவர்கள் அவதானிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டவே அதை எழுதினேன். பிரதிக்கான மூலம் என்று வரையறுக்கப்பட்ட பொதுவான எந்த அம்சங்களும் உண்டு என நீங்கள் கருதியிருந்தால் அது உங்களவில் முக்கியமானது என்பதைத்தவிர, எனக்கு அது நகைச்சுவையான ஒன்றுதான். புறச்சூழல் கவிதைக்குள் இருக்கிறதா என ஆராய்வது கவிதைக்கான மூலம் இதுதான் எனச் சொல்வதும், அது பிரதியில் இல்லை அல்லது இருக்கிறது எனச் சொல்வதும்தான்.
      எதை எதை ஒரு பிரதிகொண்டிருக்க வேண்டும் என்பதுதான் தமிழின் கடந்தகால விமர்சனங்களின் பணியாக இருந்தது.(இப்போதும்) ஒரு பிரதி என்ன செய்ய முற்படுகிறது என அனுகுவதே அந்தப் பிரதியின் மீது கட்டாயமற்ற ஒரு வினைபுரிதலாகும் என்பதே எனது நிலைப்பாடு.

      இதற்கு மேலும், ஏதாவது நான் பேசவோ அல்லது விளக்கவோ வேண்டுமென நீங்கள் கருதினால் சொல்லுங்கள் அதற்கென விரிவாக ஒரு பதிவை எழுதுகிறேன். எனக்கு நேரம் மிகக் குறைவு. இகிடைக்கும் நேரத்தில் வாசிக்கவும் புனைவுகளை உருவாக்கவும் செய்கிறேன்.
      April 11 at 2:20pm ·  ·  2
    • Vaa Manikandan ஓசூர் கவிதையுரையாடல்:http://www.nisaptham.com/2012/04/blog-post_11.html
      April 11 at 4:04pm ·  ·  4
    • Thiru Ji நேரடியாகச் சொல்ல முடியுமானால் பெயரற்ற அல்லது அடையாளமற்ற இருவருக்கு இடையிலான அந்தரங்கமான மெளனித்த பரிபாஷனையாக மட்டுமே கவிதை இருந்தால் போதும் என்றும் அது புறம், காலம், நிலம் என்ற எந்தக் கூறு குறித்தும் பிரதிநிதித்துவப் படுத்த தேவையில்லை எனவும் கவிதையின் வாசகனாக முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறேன்.- மணிகண்டன். superb.. i expected this from you...
      April 11 at 5:10pm ·  ·  1
    • Peaikaaman Kaaman 
      ‎||பறவை ஒன்று பறக்கிறது என்பதும் புறச்சூழல் நிகழ்வுதான்|| நீங்கள் சொல்வது உண்மை தான் தோழர் .ஆனால் பறக்கும் அப்பறவை எங்கிருந்து வருகிறது,வளர்ப்புப் பறவையா?அல்லது அது அல்லவா?,அது எத்திசையை நோக்கிப் பறக்கிறது,அப்பறவைக்கு உரிமையாளர் யார்?,அவர்எப்படிப் பட்டவர்,என்ன நிறத்திலான பறவையைப் பறக்கவிடுகிறார்? என பறக்கும் பறவைக்கும் அரசியலுண்டு .நிற்க ஆதவன் தீட்சண்யாவும்,ப.வெங்கடேசும் உங்கள் கவிதையில் நீங்கள் நேசித்த அல்லது வெறுத்த நிலத்தை எங்கே எனத்தான் கேட்கிறார்கள். நீங்கள் உங்கள் கவிதைக்கு உண்மையாக இருந்தீர்களேயானால் இன்னன்ன கவிதைகளில் என் நிலம் உள்ளது ,உங்களுக்கு கவிதைகளை வாசிக்கத் தெரியவில்லை அல்லது அனுபவிக்கத் தெரியவில்லை அல்லது நான் வாழ்ந்த நிலத்தை நான் எழுத விரும்ப வில்லை எனவோ விவாதித்திருக்கலாம் .அதை விட்டுவிட்டு பின் நவீன உலகம்,நகைச் சுவை என பிதர்றாதீர்கள்.ஆகாயத்தில் எறிந்த கல் என்ற கட்டுரைத் தொகுப்பில் மைய்ய நீரோட்ட அரசியலும், நுண் அரசியலும் கட்டுரையாளர் வாழும் நிலமும் தெளிவாக விவரிக்கப் பட்டு இருக்கும் . மேற்கண்ட வரிகளை வைத்துக் கொண்டு என்னை அவர்களின் வால் என்றோ தலை என்றோ நினைத்துக் கொள்ள வேண்டாம் .நிகழ்விற்கான எழுத்துக்களை வாசித்து விட்டே எழுதுகிறேன் ................நன்றி .




      ||நேரடியாகச் சொல்ல முடியுமானால் பெயரற்ற அல்லது அடையாளமற்ற இருவருக்கு இடையிலான அந்தரங்கமான மெளனித்த பரிபாஷனையாக மட்டுமே கவிதை இருந்தால் போதும் என்றும் அது புறம், காலம், நிலம் என்ற எந்தக் கூறு குறித்தும் பிரதிநிதித்துவப் படுத்த தேவையில்லை எனவும் கவிதையின் வாசகனாக முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறேன்.||




      புறம் என்ற சொல்லாடலுக்குள்ளேயே காலமும்,நிலமும் அடங்கி விடும் என்பது இந்த பின் நவீனருக்கும் தெரியாது போலும் . அணிலு ,அனுமாரு இன்னும் மத்த விலங்குகளும் ஒன்னா நிண்டு ஒத்துளைப்புகுக் கொடுத்ததாலத் தான் ராமரு போயி சீதையைக் கைப்பத்திட்டு வந்தாருன்னு ஒரு புனைவு சொல்ல அதையும் உண்மைன்னு நம்பி திண்டுக்கல்லைச் ஒரு இந்துத்துவா வாதியும்,ஆப்ப நாட்டைச் சார்ந்த ஒரு இந்துத்துவா வாதியும் அந்தப் புனைவை தலையில தூக்கி வச்சுட்டு ஆடுறாங்க .ஒருவேளை இந்த ரெண்டு ஊருக் காரர்களுக்கும் இதுவரைக்கும் முன்னப்பின்ன அறிமுகம் இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சந்தித்துக் கொண்டார்களானால் நீங்க சொன்னது மாதிரி அந்த ரெண்டுபேருக்கும் இடையில எவ்வளவு அந்தரங்கமான மெளனித்த பரிபாஷனை நடக்கும்னு உங்களுக்குத் தெரியுமா ? தோழரே !. ஆக உங்களோட கவிதை நம்பிக்கைக்கும் ,அந்த இந்துத்துவா வாதியோட நம்பிக்கைக்கும் என்னால வேற வித்தியாசத்தைப் பார்க்க முடியவில்லை தோழர் அவர்களே ! ஒருவேளை நீங்கள் சொல்வது போல் புறம், காலம், நிலம் அற்ற ஒரு கவிதை இருந்தால் அதை எனக்கு தெரிவியுங்கள் தோழரே !

      .......................வணக்கம் தோழர் .
      April 11 at 7:22pm ·  ·  1
    • Riyas Qurana மேலேயுள்ள எனது குறிப்பை மீண்டும் நீங்கள் வாசிப்பது நல்லது...தோழர் பேய்மான்.
      April 11 at 8:25pm ·  ·  1
    • Riyas Qurana 
      என்னுடைய கவிதைச் செயல் அப்படியான ஒன்று அல்ல.நவீன கவிதையை அனுகும் தரவுகளோடும், விமர்சனச் செயல்முறைகளோடும், நவீனகவிதைகளால் அதிகம் தாக்கமுற்றிருக்கும் மனச் சூழல்களோடும் நெருங்கிவிட இடந்தராதவை.நவீன கவிதையாக நாம் பாவித்த இன்னும் பாவிக்கின்ற பிரதிகள் எல்லாம், பிரதிக்கு வெளியேதான் தனது அர்த்தத்தளத்தை உருவாக்கிவைத்திருக்கிறது.புறச் சூழல்களின் கதைகளாலும், செயல்கள் மற்றும் அனுகல்களாலும் உருவாக்கப்படும் புரிதல்கள் பிரதிக்குள் அர்த்தங்களாக படிந்து நிறைவடைகிற வழிகளைத் திறந்துவிடுவதும் - பரிந்துரைப்பதுமே நவீன கவிதையின் செயலாக உருவாகிவந்திருக்கிறது.புறச் சூழலின் பொருள் (அர்த்த) உற்பத்தியை மிக ஆற்றலோடு ஒருங்கிணைக்கும் ஒரு இடமாகவும், தொழிற்ச்சாலையாகவுமே நவீன கவிதை செயற்பட்டுவந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து முரண்படுவதுதான் எனது கவிதைச் செயலின் அடிப்படையான விசையமாக அமைந்திருப்பதாகும். முதல்கட்டமாக முற்றிலும் பிரதிக்குள் மாத்திரமே செயற்படக்கூடிய அர்த்தத்தள உற்பத்தியைச் செய்யும் அகச் சூழலை உற்பத்திசெய்கிறது.தனக்கான தர்க்கத்தை, சர்ச்சைகளை,பேச்சுக்களை, தங்களுக்காகவே உரையாடும் ஒரு உருவக வெளியை தயாரிப்பதும், பொருள்(அர்த்த)உற்பத்தியை பிரதியின் எல்லைக்குள்ளாகவே பெருக்கி முரண்பட்டும் இணைந்தும் சர்ச்சிப்பதாகச் செயற்படுவதை தனது பணியாகக்கொள்கிறது. அடுத்த கட்டமாக அதிலிருந்து தாவி, விரிவுகொண்டு ஊடிழைப்பிரதியாக அதாவது துணைப்பிரதியாக அமையும் புறச்சூழலை அக்கறைகொள்வதாகும்.இந்தப் புறச்சூழல் தாக்கம் - த்துவம்,கலாச்சாரம்,வரலாறு என பலதுறைகளையும் பல மன அமைப்புகளையும் சீண்டுவதற்காக என்றே பிரத்தியேகமாக பிரதி தனக்குள் மாயாஜாலம் நிறைந்த ஒரு உலகத்தை உருவாக்கிவைத்திருக்கிறது. புறச்சூழலில் எதார்த்தம் எனக் கருதப்படும் புனைவுகளுக்கும், பிரதியின் எல்லைக்குள்ளாக உருவாகும் உலகங்களுக்குமிடையிலான சீண்டல்களும், உரையாடல்களும் பரஸ்பர ஒப்பீடுகளுமே இரண்டாங்கட்ட பொருள் உற்பத்தியை முயற்சிக்க உதவுகின்றன.ஆகவே, நவீன கவிதைக்கான விபரங்களோடும் அனுகல்முறைகளோடும் எனது கவிதைக்குள் நுழையும்போது, அங்கு ஒரு மேஜிக் உலகம் அல்லது வித்தைகள் நிறைந்த உலகம் மாத்திரம்தான் காட்சியளிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
      April 11 at 9:57pm ·  ·  1
    • Balasubramanian Ponraj அடப்பாவி, இப்படி பதிவு செஞ்சிருக்கே. ஹிண்டுல வேலைசெய்றது நல்லாத் தெரியுது. தொடர்ந்து எழுதவும்.
      April 11 at 10:33pm ·  ·  4
    • Thooran Guna 
      காலத்தை மயக்கமூட்டுவது என்பது புனைவின் பிரதான அம்சம். நூற்றாண்டுகள் பழமையான ஒரு மரத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்பு உறிஞ்சிய நீரும் நேற்றைக்கு உறிஞ்சிய நீரும் இணைந்தே அதன் பச்சையத்தில் இருக்கின்றன.மேலும் ஒரு புனைவுச்செயல்பாடு நிகழும்போது அதன் காலம் தன்னியல்பாகவே அதற்குள் இடம்பெற்று விடுகிறது.அந்த காலத்தைத்தான் புனைவாளன், புனைவின் அலகுகளால் மயக்கமூட்டுகிறான். கவிதை எப்போதுமே abstract வடிவம்தான்.அது சரித்திர புத்தகமாக இருக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்த முடியாது.
      April 12 at 8:54am ·  ·  7
    • Isai Karukkal Thooran Guna eappadida ippadi ?
      April 12 at 9:09am ·  ·  2
    • Riyas Qurana ‎//கவிதை எப்போதுமே abstract வடிவம்தான்.அது சரித்திர புத்தகமாக இருக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்த முடியாது.// வலியுறுத்த முடியாது. என்பதடன்தான் நானும் ஒத்துப்போகிறேன்.
      ஆனால், காலத்தை அது பிரதிபலிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
      அதற்கு நிறைய முக்கிய கவிஞர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
      அதன் அவசியமும் புறக்கணிக்கத்தக்கதல்ல.
      April 12 at 9:57am ·  ·  4
    • Ba Venkatesan 
      ”Creating the imaginary terrain where moral judgement is suspended was a move of enormous significance: only there could novelistic characters develop-that is, individuals conceived not as a function of some preexistent truth, as examples of good or evil, or as representations of objective laws in conflict, but as autonomous beings grounded in their own morality, in their own laws.” – Milan Kundera (Testaments betrayed).

      மன்னிக்கவும், நான் பெரும்பாலும் முகப்புத்தகம் பார்ப்பதில்லை. நண்பர்கள் சொன்னதன்பேரில் இதைக் கவனிக்க நேர்ந்தது. படைப்பைப் பொருள் கொள்ளுதல் குறித்த உங்கள் பார்வை நிஜமாகவே மிகவும் பண்பட்ட ஒன்று ரியாஸ். நீங்கள் வலிந்து உங்கள் கவிதைகளை நியாயப்படுத்த வரவில்லை. உண்மையில் உங்கள் கவிதைகள் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல முற்றிலும் பிரதிக்குள்ளாகவே வாசித்து அர்த்தப்படுத்திக்கொள்ள வாசகனை உந்தும் தன்மை கொண்டவைதான். ஆனால் ரியாஸ், மிலன் குந்தேரா மேலே சொல்லியிருப்பது உட்பட, ஆசிரியனின் இறப்பு, கதை நீக்கம் இன்னபிற பின்நவீனத்துவச் சொல்லாடல்கள் யாவுமேகூட ஒரு உருவகத் தளத்தில் இயங்குபவைதான். முற்றிலும் பிரதிக்கான விதிகளோடு இயங்கும் ஒரு உலகத்தைக் கட்டுகிறேன் என்று படைக்கத் துவங்கும ஒரு ஆசிரியன் தன்னை இறந்துபோக அனுமதித்துக்கொள்வானா சொல்லுங்கள். நாம் ஏன் மேஜிக் என்கிற பெயரில் விட்டலாசாரியாவைப் படைப்பதில்லை, ஏன் பழைய பாணி தேவதைக் கதைகள் எழுதுவதில்லை. சற்று யோசித்துப் பார்த்தால் நாம் அவற்றின் வடிவத்தை, காலனிய மனோபாவத்திற்கு எதிராக, கையாள்கிறோமேயொழிய உண்மையில் தேவதைக் கதைகளையா நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். ஆக பிரதிக்குள்ளாகவே இயங்கும் ஒரு உலகைப் படைப்பில் நிகழ்த்துவது என்பது நிஜவுலகின் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுக்கங்களுக்கு எதிரான ஒரு அரசியல் செயல்பாடு (மிலன் குந்தேரா-மேலே). அதாவது நிஜத்தின் ஞாபகங்களை அச்சாகக்கொண்டுதான் நீங்கள் சொல்லும் அந்த மேஜிக்கை படைப்பாளி நிகழ்த்த முடியும். அந்த ரீதியில் படைப்பு ஒருவகையில் நிஜத்தோடுதான் முரண் அல்லது நேர் உறவு கொள்கிறது. அந்த வகையில்தான் உங்கள் பிரதி உள்பட எந்தவொரு படைப்பும் ஒரு அரசியல் பிரதியாகவும் முடியும். யதார்த்தத்தின் மொழியை படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தத் துவங்கிய கணத்திலேயே நீங்கள் நிஜத்தின் ஞாபகமின்றி இயங்க முடியாதவராகிவிடுகிறீர்கள்.
      April 12 at 8:19pm ·  ·  4
    • Ba Venkatesan 
      போகட்டும், புறத்தின் சுட்டலின்றி உங்கள் பெரும்பாலான கவிதைகளின் உள்கட்டமைப்பையே எடுத்துக்கொள்வோம். அங்கே பிரதிக்குள் இயங்கும் தூல உலகொன்றும் (உதாரணமாக தெருவில் அலையும் பூனை) அதற்கிணையாக இயங்கும் மொழி உலகொன்றும் (உதாரணமாக காலண்டர் எலி) கட்டப்பட்டிருக்கிறது. எப்போதெல்லாம் (பிரதிக்குள் இயங்கும்) தூல உலகம் நெருக்கடிக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் அது லாவகமாக மொழியின் உலகிற்குள் தாவிவிடுகிறது (நிஜப் பூனை காலண்டர் எலியைத் தின்று பசியாறிக்கொள்வதைப்போல). இங்கே மொழி என்பது ஆசிரியன் தன்னை மாய்த்துக்கொண்டு வாசகன் கையில் தன்னை ஒப்புக்கொடுக்கும் தைரியத்தையோ சவாலையோ வழங்குவதற்குப் பதிலாக, பல பொருள் அர்த்தம் என்கிற, வசதியான, மறைப்பிற்குள் தன்னை மறைத்துக்கொண்டு வாசகனுக்குப் பிடிபடாத தந்திரத்தைக் கைக்கொள்ள உதவுகிற மந்திரக்கோலாக மாறிவிடுகிறது. இதைத்தான் ஒசூர் கூட்டத்தில் வேறுவேறு வார்த்தைகளில் மாறிமாறிப் பேசிக்கொண்டிருந்தோம். வாசகன் பல பொருள் அர்த்தத்தை எடுத்துக்கொள்வானென்று படைப்பாளி வெறுமே சிதறலான மொழியை மட்டும் கொடுத்துவிட்டு இலக்கியத்தை உடைத்துவிட்டதாகக் கூறிக்கொள்வது ஆசிரியனும் தன் படைப்பின்மூலம் தனக்கு முந்தைய பல பிரதிகளின் வாசகன் என்னும் உண்மையை மறுத்து படைப்பின்மீதான அவனுடைய அதிகாரத்தை உறுதி செய்வதாகத்தான் அமைந்துவிடும். உங்கள் கவிதைப் பிரதியை இப்படியாகக் கட்டவிழ்ப்புச் செய்துவிட்டுப் பிறகு ஊடுபிரதியாக புற யதார்த்தத்தைக் கையிலெடுக்கிறபோது சூழல்மீதான உங்கள் பார்வையாக அது விஸ்தரிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது.
      April 12 at 8:19pm ·  ·  4
    • Riyas Qurana http://maatrupirathi.blogspot.com/2012/04/blog-post_12.html கவிதை புறச் சூழலைப் பிரதிபலிக்கனும்...?
      April 12 at 9:37pm ·  ·  2 · 
    • Periyasamy Periyasamynatarajan 
      ஒரு படைப்பாளியை இதை நீ எழுத வேண்டுமென யாராலும் கட்டாயப்படுத்த முடியாது. அதே போல் ஒரு வாசகனை எனது படைப்பில் இதையெல்லாம் எதிர்பார்க்காதே எனவும் கூற முடியாது. எனது படைப்பை நானே எனது தாளில் வைத்திருக்கும் வரை அது எனக்கானது மட்டுமே. ஆனால் அத்தாளை ஒரு சுவற்றில் ஒட்டிவிட்டு அதை எல்லோரும் கொண்டாட வேண்டுமென எதிர்பார்ப்பதும் நியாயமில்லை. பலவாறு விமர்சனங்கள் வரத்தான் செய்யும். நான் ஒட்டிய தாளை படிப்பதற்காக அவன் ஒப்புக்கொடுக்கப்பட்ட காலத்திற்காக அவன் எதிர்பார்ப்பு அதில் இல்லையெனில் அது குறித்த பதிவை சொல்வது ஆரோக்கியமானதே... 
      April 12 at 10:52pm ·  ·  3
    • Firthouse Rajakumaaren நல்ல விவாதங்கள் .... முழுமையாக நிகழ்வுகளின் பதிவை போடுங்கள் தோழர்களே ...
      April 12 at 10:54pm ·  ·  1
    • Periyasamy Periyasamynatarajan ஒரு தத்துவம் உன்னதமாக பார்க்கப்பட்ட காலத்தில் அத்தத்துவத்தை அற்புதமாக பயன்படுத்தியவனின் படைப்பு அத்தத்துவம் மலினப்படுத்தப்பட்ட காலத்தில் வெளிப்படுத்தப்பட்டால் காலம்தாண்டிய படைப்பென சொல்லி தன் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்ளத்தானே வேண்டும்...
      April 12 at 10:57pm ·  ·  2
    • Ba Venkatesan புறச்சூழல் புறச்சூழல் என்று புலம்பிப் புலம்பி ஒரு முழுக் கட்டுரையை வீணடித்திருக்கிறீர்கள் ரியாஸ். புறச்சூழல் என்பது பிரதியாக்கத்தில் என்னவாகக் குறிக்கப்படுகிறது என்பதைச் சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லையென்றால் நம்மையறியாமலேயே அதற்குள்ளேயே போய் விழுந்துவிடும் அபாயமிருக்கிறது. அதுதான் உங்கள் கவிதைகளுக்கும் நேர்ந்திருக்கிறது. உதாரணத்திற்கு உங்களுடைய “இழப்பு” கவிதை முழுக்க முழுக்க பூனைx/எலி உறவு சார்ந்த புறச்சூழல் சுட்டியால் கட்டப்பட்டிருக்கும் கவிதையா இல்லையா? அங்கே நீங்கள் நிகழ்த்தியிருக்கும் மேஜிக் என்பது வாசகனை முழுக்க முழுக்க புறச்சூழல் சார்ந்த ஞாபகங்களுக்குள் தள்ளி பிரதியின் உலகத்திலிருந்து அவனை வெளியே விரட்டிவிடும் வன்முறையா இல்லையா? பூனை எலி உறவு அந்தக் கவிதையில் எங்கே புறச்சூழலுக்கு எதிரானதாக செயல்பட்டிருக்கிறது? மேஜிக் மேஜிக் என்கிறீர்கள். ரியாஸ், மேஜிக்கில் இரண்டு வகையிருக்கிறது. தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பது ஒரு வகை. இதன் ஆச்சரியம் முழுவதும் புறச்சூழலைக் கணக்கிலெடுத்துக்கொண்டுதான் நிகழ்த்தப்படுகிறது. தொப்பிக்குள்ளிருந்து புறா வர முடியாது என்கிற ஓர்மைதான் அந்த நிகழ்வை மேஜிக் ஆக்குகிறது. மேஜிக்கில் இன்னொரு வகையிருக்கிறது. போன கணம்வரை தன் முகத்தை நண்பன் என்கிற அடையாளத்தோடு காட்டிக்கொண்டிருந்தவன் திடீரென்று அந்த முகத்துக்குள்ளிருந்து துரோகி என்கிற இன்னொரு முகத்தை எடுத்துக் காட்டுவது. இந்த மே$ஜிக் இருக்கிறதே, இதுதான் பிரதியின் உண்மையான மேஜிக். இது புறச்சூழலின் ஞாபகங்களை வாசகனின் மனதிலிருந்து முற்றாக அழித்து அவனை பிரதிக்குள்ளேயே அதற்கான காரணங்களைத் தேடிச் சொல்லி நிர்பந்தித்துவிடும். இந்தவித கவிதைகளை புறச்சூழலைச் சுட்டிக்கூட மேஜிக் ஆக்க முடியும். இசையின் கவிதைகளில் ஒன்று ஷகிலா என்கிற புறச்சூழல் சார்ந்த பிம்பம் ஒன்றைச் சுட்டி அதன் நிஜத்தை அழித்து பிரதியின் பிம்பமாக மாற்றும் மேஜிக்கை அழகாகச் செய்கிறது. வாசித்துப் பாருங்கள். உங்களை யாரும் ஈழத்துப் பிரச்சினையை வைத்து ஏன் எழுதவில்லை என்று கேட்கவில்லை. உங்கள் கவிதைகள் நிகழ்த்தும் மேஜிக்கின் தன்மை தொப்பிக்குள்ளிருந்து புறா எடுப்பதற்குமேல் அதிகமில்லை என்பதைப் புரிந்துகொண்டபின் எதனால் அது அப்படி ஆகிறது என்கிற துணைக் கேள்விக்குத்தான் அதை புறச்சூழலுக்கான உங்கள் பாணி எதிர்வினையாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. புறச்சூழலை நினைவுறுத்தாத, முற்றிலும் பிரதி சார்ந்த உலகைப் படைப்பது தன்னாலேயே வாசகனை தனக்குள் இழுத்துக்கொண்டுவிடும். பிரகடனங்கள் தேவையில்லை.
      April 13 at 5:22am ·  ·  4
    • Ba Venkatesan 
      அப்புறம் ரியாஸ், அந்தக் குருவி விஷயம். குருவி மென்மையின், சுதந்திரத்தின், அறியாமையின், முக்கியமாக அனாதரவின், உருவகம். தமிழில் அப்படியான படைப்புகள் உண்டு. கன்னி (பிரான்ஸிஸ் கிருபா), மஞ்சள் வெய்யில் (யூமா வாசுகி), அப்புறம் மலைச்சாமி, சுயம்புலிங்கம், கண்டராதித்தன், சமீபத்தில் சபரி ஆகியோரின் கவிதைகள். வண்ணத்துப்பூச்சியின் பறத்தலையொத்த இவற்றையெல்லாம் ஆராய வேண்டாம், தொட்டாலே போதும், கையில் வண்ணங்களை உதிர்த்துவிடும் அளவிற்கு மென்மையானவை. இவற்றை நெருங்கவே நான் அஞ்சுவேன். இவற்றின்முன் தலை குனிந்து நிற்பதைத் தவிர வேறெதையும் செய்ய எனக்குத் தோன்றுவதில்லை. ஏனென்றால் இவற்றைக் குத்திக் கிழித்தாலும் பேந்தப் பேந்த விழிக்குமேயன்றி பதில் பேசத் தெரியாது. இவையும் சிட்டுக் குருவிகள், ஒரு கவிதைத் தொகுப்பைப் பாதுகாக்க பக்கம் பக்கமாக இத்தனை அறிவார்த்த வாதங்களை வைக்கும், இத்தனை வாதங்களின் சுமையையும் தன்னுள் சுமந்துகொண்டிருப்பதான மனப்பதிவை வாசகனுக்குக் கொடுக்கும், இத்தனை சமத்காரமான உங்கள் கவிதைகளும் சிட்டுக் குருவிகளா?! நண்பரே, உங்களுக்கே சற்று அதிகமாகத் தோன்றவில்லை.
      April 13 at 9:01am ·  ·  4
    • Riyas Qurana தோழர் பா.வெங்கடேசன் அவர்களே...வணக்கம்.
      எனது கவிதைகள் பற்றிய விமர்சனங்கள் பற்றியொ..
      வாசிப்பு பிரதிபற்றியோ எனக்கு ஒன்றுமில்லை.
      அதை மிகவும் ஆனந்தத்தோடு ஏற்றுக்கொள்கிறென்.
      அதில் எனக்கு சிறு தயக்கமும் இல்லை.
      உங்கள் கவனிப்புகளை ஆர்வத்தோடு வர வெரகிறென்.
      குறித்த ஒன்று இருந்தால்தான் அது கவிதையாக ஆகும் என்பதை
      திட்டப்படுத்துவதை மாத்திரமே எதிர்வினை செய்ய முற்படுகிறேன்.
      பிரதியை நீங்கள் வாசித்ததின் கதைகளை விபரிப்பதை நான் மறுக்கவில்லை.
      தொப்பிக்குள் இருந்து புறா எடுப்பதைப்போன்ற கவிதைச் செயல் இல்லை என்று
      நான் மறுக்கப்போவதில்லை.

      கவிதைப் பிரதி தனக்குள் இருக்கும் சம்பவங்களை எப்படி நடத்த முற்படுகிறது என்பது தொடர்பிலான
      வாசிப்புக்கள் நீங்கள் குற்றம் சாட்டுவதைப்போல சிலர் சரிகாணவும் வாய்ப்புண்டு.
      அதில், நான் மூக்கை நுழைக்க விருமபவில்லை.
      உங்களை எங்காவது அந்தப் பிரதி காயப்படுத்துவதாக நினைத்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

      நான் சொல்ல விரும்புவது இதுதான். இப்படியான அம்சங்கள் கவிதைக்கு அவசியமானது என வரையறுப்பதை அல்லது திணிப்பதைத்தான், மற்றப்படி கவிதையை பற்றிய வாசகப் பிரதியை மறுக்கவில்லை.
      //புறச்சூழல் புறச்சூழல் என்று புலம்பிப் புலம்பி ஒரு முழுக் கட்டுரையை வீணடித்திருக்கிறீர்கள் ரியாஸ். //இது மிகக் கூர்மையான அவதானம்.
      நன்றிகள் தோழர்.
      April 13 at 11:14am ·  ·  1
    • Ba Venkatesan 
      ரியாஸ், அடப் போங்கய்யா என்று சொல்வதைப்போல இருக்கிறது உங்கள் முடிப்பு. பரவாயில்லை. என்றாலும் உங்கள் கவிதைகளை இந்தச் சூழலின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று என்பதை ஒத்துக்கொண்ட பிறகுதான் அதன் மீதான விமர்சனத்தை நானும் ஆதவன் தீட்சண்யாவும் முன்வைத்தோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்தப் பதிவிற்காக அல்ல, ஒன்றரை மாதங்களுக்கு முன் சேலத்தில் நடத்தப்பட்ட தக்கை கூட்டத்திலேயே இந்தத் தலைமுறையின் தனித்துவம் மிக்க குரல்கள் என்று நான் கருதுவதாக முன்வைத்த ஐந்து குரல்களில் உங்களுடையதும் ஒன்று. (மற்ற நான்கு, இசை, சபரி, நரன், பாம்பாட்டிச் சித்தன்). எனவே உங்கள் கவிதைகளை விமர்சிப்பது அவற்றை நிராகரிப்பது ஆகாது. மற்றவர்களால் குற்றம் சாட்டுவதாகத் தோன்றக்கூடிய ஒரு குரல் என்னிடம் இருப்பதாக நீங்கள் சொன்னது, நான் அப்படி நினைப்பதில்லையானாலும் அது அவ்விதம் நிகழ்கிறது என்பது உண்மைதான். மன்னிப்புக் கோரல் என்பது கசப்பின் வெளிப்பாடு. எனவே அதைத் தயவுசெய்து திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்து வேறு தளங்களில் விவாதம் தொடர வேண்டுமென்பதே என் விருப்பம்.
      April 13 at 7:32pm ·  ·  3
    • Riyas Qurana அன்பின் பா.வெங்கடேசன் அவர்களே..
      நீங்கள் விரும்பியதற்கிணங்க மன்னிப்புக் கோரலை வாபஸ் பெற்றுக்கொண்டேன்.
      நிலநடுக்கம் உருவானது மெய்.
      சுனாமி வருமென ஊகித்ததும் மெய்.
      அதனால் ஏற்பட்ட பதட்டங்களும் அதை எதிர்கொள்ள உருவாக்கிய தயார் நிலைகளும் மெய்.
      கடைசியில் சுனாமி அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டதைப்போல உள்ளது.

      எனது கவிதைகளை விமர்சிப்பதில் ஒன்றும் சிக்கல் இல்லை.
      உங்களுக்கு விமர்சிப்பதாற்காக இருக்கின்ற உரிமையை ஏற்கிறேன்.
      உங்கள் விமர்சன முறைமை குறித்து சில விமர்சனங்கள் இருந்தது.

      பிரதியை அனுகும் செயலில், அதைக் கடந்து அல்லது அதற்கு உதவி செய்யவென நீங்கள் வழமையான (இன்றும் புளக்கத்திலுள்ள) ஒரு அறிவிப்பைச் செய்திருந்தீர்கள். அல்லது அந்த அறிவிப்பிற்கு ஆதரவாக இருந்தீர்கள். குறிப்பிட்ட சில விசயங்கள் இருப்பதினூடாகத்தான் ஒரு பிரதி கவிதையாக நிறைவடைகிறது. அல்லது பரிமாணம் எடுக்கிறது. உருமாறுகிறது. என்பதை நெருக்கமுறும் ஒரு கட்டளை அங்கு மேலெழுந்தது. அது குறித்தே எனது எதிர்வினை செய்தேன்.அந்த எதிர்வினையினிடையே எனது கவிதைச் செயல்பற்றியும் சில இடங்களில் விபரிக்க வேண்டிவந்தது. எனக்கு விமர்சனங்களுள்ள எனது கவிதைகளும் நிறைய இருக்கிக்கிறது. அதனால்தான், அந்த விமர்சனங்களை மேலும் கடந்துவிடும் ஈடுபாட்டில் பிரதிகளை முயற்சித்தபடி இருக்கிறேன்.

      நான் கோடிட்ட மையமான சிக்கல் தொடர்பில் உரையாடுவதெனில், அதில் பங்காற்ற முடியும்.
      நான் என்பாட்டுக்கு அறிந்தவன் என பேச முற்படவில்லை. இந்த உரையாடலில் கலந்துகொள்ளும்
      அனைவரின் பங்காற்றுதலினால் ஒரு சிக்கலை புரிந்துகொள்ள முயற்சிக்கிறொம் அவ்வளவுதான்.
      நீங்கள் குறிப்பிட்ட, இந்தத் தலைமுறையின் முக்கிய குரல்களின் பட்டியல் இன்னும் நீளக்கூடியது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டுமென நினைக்கிறேன். வா.மணிகண்டன்,நிலாரசிகன்,யாத்ரா,நரன்,தூரன்குணா,அனார்,றஷ்மி,இளங்கோ, என இன்னும் நீளக்கூடியது. ஒவ்வொருவரின் பிரதிகளுக்குமான விமர்சன அனுகுமுறைகளை உருவாக்கி வாசிக்க வேண்டும். ஒரே விமரசன அனுகுமுறையால் அனைவரின் கவிதைப் பிரதிகளையும் அனுகுவதை ஏற்பதில் தயக்கங்கள் இருக்கிறது. ஒருவர் நீளம் பாய்கிறார்,ஒருவர் உயரம் பாய்கிறார், ஒருவர் அம்பு வீசுகிறார். இப்படி ஒவ்வொரு பிரதியும் ஒவ்வொரு கவிதைச் செயலுக்குரியன. ஆனால், இவைகளை அனுகுவதற்கு ஒரேயொரு அனுகுமுறையையே வைத்திருக்கிறார்கள்.அதிகம்பேரிடம் எதுவுமேயில்லை.
      அபிப்பிராயம் சார்ந்த (உள்ளொளி) சில கருத்துக்களையொ தகவல்களையோ உதிர்த்துவிட்டு நின்று விடுகின்றனர்.

      உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கலாம் என விரும்புகிறேன். நீங்கள் பிரதியை அனுகப்பயன்படுத்தும்
      விமர்சன அனுகுமுறைதான் என்ன..? அதை விவரிக்கும்போது, உரையாடும்போது பல சிக்கல்கள் இங்கு தவிர்ந்துவிடும். விமர்சகன்தான் புனைவாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். விமர்சகனிடம் தான் எப்படி அனுகுகிறான்என்று கேட்கக் கூடாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
      April 13 at 10:26pm ·  ·  1
    • Sivakumar Padmanabhan naam virumbukira manam thirappu nigazhkirathu. magizhchiyaaga ullathu. nandri.
      April 13 at 11:47pm ·  ·  2
    • Ba Venkatesan 
      ரியாஸ், இந்த விவாதம் இன்னும் சிறப்பாகத் தொடர இது உங்கள் கவிதைகளின்மீதான பிரத்யேகமான உரையாடலாக இல்லாமல் கவிதையாக்கம் பற்றின பொதுவான உரையாடலாக மாறவேண்டும். நம் இருவருக்குமே இது உடனடிச் சாத்தியமில்லையென்று எனக்குத் தோன்றுகிறது. சற்று இடைவெளிவிட்டு உணர்வோதங்கள் அடங்கியபின் மீண்டும் துவக்கலாமே. உடன்படுகிறீர்கள்தானே. நான் சொல்வதை யோசிக்க உங்களுக்கும் உங்கள் கவிதையாக்கம் குறித்து மீளச் சிந்திக்க எனக்கும் சிறிது அவகாசம் எடுத்துக்கொள்வோம். இதற்குள் மற்ற நண்பர்களிடமிருந்து ஏதாவது பங்களிப்பு இருக்கிறதா என்றும் பார்த்துவிடலாம். சரிதானே. விமர்சனம் மற்றும் அதன்மீதான உரையாடலே விவாதத்தை அடைத்துக்கொண்டுவிட்டதால் உங்கள் கவிதைமொழியின் தனித்தன்மை குறித்த என் சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளவே வாய்ப்பில்லாமலும் போய்விட்டது.
      April 15 at 9:51am ·  ·  5
    • Riyas Qurana ‎//இந்த விவாதம் இன்னும் சிறப்பாகத் தொடர இது உங்கள் கவிதைகளின்மீதான பிரத்யேகமான உரையாடலாக இல்லாமல் கவிதையாக்கம் பற்றின பொதுவான உரையாடலாக மாறவேண்டும். //எல்லோரும் அல்லது அதிகம் பேர் பங்கெடுத்து இது தொடர்பான உரையாடலை மேற்கொள்வதை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். அது தான் சமகால கவிதைச் செயலை புரிந்துகொள்வதற்கு தடயங்களை வழங்கக்கூடியது..நானும் இதில் பங்களிப்புச் செய்ய விரும்புகிறேன் அன்பின் தோழர்.
      April 15 at 11:35am ·  ·  2
    • மனோ. மோகன் ‎//இந்த விவாதம் இன்னும் சிறப்பாகத் தொடர இது உங்கள் கவிதைகளின்மீதான பிரத்யேகமான உரையாடலாக இல்லாமல் கவிதையாக்கம் பற்றின பொதுவான உரையாடலாக மாறவேண்டும்.
      – பா.வெங்கடேசன்.// இதையே நானும் விரும்புகிறேன்.

      மதிப்பிற்குரிய நண்பர் பா.வெங்கடேசன்! உங்கள் விவாதம் ஆரோக்கியமானது. ஆர்வமூட்டக்கூடியதும் கூட. ஆனால் எங்கோ இடிக்கிறது. முதல் தடவை நீங்கள் பின்னூட்டமிட்டபோது மிலன் குந்தராவின் வரிகளை எழுதிவிட்டு ஆசிரியனின் மரணம் மாய யதார்த்தவாதம் ஆகியவற்றையும் மிக நேர்த்தியாக விளக்கிச் செல்கிறீர்கள். அது உங்கள் வாசிப்பின் கூர்மையைக் காட்டுகிறது. அதே சமயம் அடுத்த பின்னூட்டத்தில் அதற்கெதிராகவே நீங்கள் வினையாற்றுகிறீர்களோ என்று ஐயம் ஏற்படுகிறது. ஏதோ முன்முடிபுகளை வைத்துக் கொண்டு படைப்பை அணுகுகிற மனம் உங்களையும் அறியாமல் அங்கு வெளிப்படுகிறதோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. வாசகனுக்கு ஒரு பிரதி எதையேனும் உணர்த்தியே ஆகவேண்டுமென்கிற ஆசையாகவும் அது இருக்கலாம்.
      April 15 at 12:43pm ·  ·  1
    • மனோ. மோகன் 
      முதல் பின்னூட்டத்தில் //முற்றிலும் பிரதிக்கான விதிகளோடு இயங்கும் ஒரு உலகத்தைக் கட்டுகிறேன் என்று படைக்கத் துவங்கும் ஒரு ஆசிரியன் தன்னை இறந்துபோக அனுமதித்துக்கொள்வானா சொல்லுங்கள்.// என்று ஆசிரியனின் வன்முறையைத் தோலுரிக்கும் நீங்கள் மீண்டும் அடுத்த பின்னூட்டத்தில் பிரதிக்கான விதிகளின் முன்முடிபொன்றை வழிமொழிகிறீர்களோ என்று ஐயம் எழுகிறது. மீண்டும் பிரதியின் தூலமான ஏதோவொரு பகுதியை ஆசிரியனிடம் எதிர்பார்க்கும்போது உங்களையும் அறியாமல் அது நிகழ்வதாகக் கருதுகிறேன். உதாரணத்திற்கு உங்கள் இந்த வரிகளைச் சொல்லலாம். // எப்போதெல்லாம் தூல உலகம் நெருக்கடிக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் அது லாவகமாக மொழியின் உலகிற்குள் தாவிவிடுகிறது. இங்கே மொழி என்பது ஆசிரியன் தன்னை மாய்த்துக்கொண்டு வாசகன் கையில் தன்னை ஒப்புக்கொடுக்கும் தைரியத்தையோ சவாலையோ வழங்குவதற்குப் பதிலாக, பல பொருள் அர்த்தம் என்கிற, வசதியான, மறைப்பிற்குள் தன்னை மறைத்துக்கொண்டு வாசகனுக்குப் பிடிபடாத தந்திரத்தைக் கைக்கொள்ள உதவுகிற மந்திரக்கோலாக மாறிவிடுகிறது.// என்று நீங்கள் பின்னூட்டமிட்ட இடத்தில் தான் உங்களை நான் இப்படி விமர்சித்ததற்கான கட்டாயத்திற்குத் தள்ளப் படுகிறேன். பிரதி தன்னை வாசகனிடம் ஒப்படைக்கும்போது அது தூலமான ஒரு பொருளாக இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. வாசகனுக்குப் பிடிபடாத தந்திரம் என்பதாக நீங்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அப்படி ஒரு தந்திரத்தை ஆசிரியன் நிகழ்த்தவே செய்கிறான் என்றாலும் கூட அவனது உதவியில்லாமல் ஒரு வாசகனாகிய நான் அதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். புரியாதபோது அதன் மாயத்தன்மையின் பிரதியின்பத்தை மட்டும் அனுபவித்து விட்டு அர்த்தத்தை ஒத்திப் போடுகிறேன். என்னைப் போலவே ஒவ்வொரு வாசகனுக்கும் அத்தகைய பிரதி வேறு வேறு விதமான அனுபவத்தைக் கொடுத்துவிட்டு நகர்கிறது. தூலமாக ஒன்றைக் கையளிக்கிற பிரதிகளை விடவும் இத்தகைய பிரதிகளில் வாசக சுதந்திரம் அதிகம்.
      April 15 at 12:43pm ·  ·  1
    • மனோ. மோகன் 
      ஆசிரியன் தன்னை மாய்த்துக்கொண்டு வாசகன் கையில் தன்னை ஒப்புக்கொடுக்கும் தைரியம் என்பதான உங்கள் வரிகளை மீண்டும் ஒருமுறை வாசிக்கலாம். இன்னும் அந்த வரி ஆசிரியனைச் சாகடிக்கவே இல்லை. ஆசிரியன் வாசகனின் கையில் பிரதியைக் கையளிப்பதில்லை. வாசகன் தானே பிரதியை அணுகுகிறான். அணுகும் நிமிடத்தில் ஏற்கனவே ஆசிரியன் இறந்து விட்டிருக்கிறான். இப்போது வாசகன் இறந்துவிட்ட ஆசிரியனைப் பொருட்படுத்தாமல் தானாகவே அதைப் பொருள்கொள்ள முயல்கிறான். எனக்குத் தெரிந்தவரை ஆசிரியனின் மரணம் கோட்பாடு சொல்வது இதைத்தான். இங்கு ஆசிரியன் தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறானா கொலை செய்யப்படுகிறானா என்கிற ஆசிரியனை மையமிட்ட எந்தத் தேடலும் அவசியமில்லாதது. ஆனால் உங்கள் கருத்து ஆசிரியனின் மரணம் சார்ந்தும் சரி பொருண்மையைக் கையளித்தல் சார்ந்தும் சரி ஆசிரியனை மையமிட்டே இயங்குவதான ஒரு புரிதலை எனக்குத் தருகிறது. நீங்கள் இதை ஒரு குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளாமல் மேற்கொண்டு பேசவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். நன்றி.
      April 15 at 12:44pm ·  ·  1
    • Ba Venkatesan 
      நண்பர்கள் சொன்னார்கள், முகப்புத்தகத்திடம் போகாதே, சிக்கிக்கொள்வாய் என்று. உண்மையாகிவிட்டது. என்றாலும் மனோ, நல்ல சிந்தனைகளைக் கேள்விகள்தான் உருவாக்குகின்றன என்கிற அளவில் உங்களிடம் உரையாடுவது மகிழ்ச்சியையே தருகிறது. என் நிலைப்பாடு இதுதான்: ஆசிரியனின் இறப்பு என்பதை நாம் வாசகன் பிரதியை அணுகுமிடத்தில் நிகழ்வது என்று நாம் பொருள் கொள்வது சரியானதுதான். இதைச் சற்று இப்படிப் பாருங்கள்: ஒரு பிரதிக்குள்ளிருந்து வாசகன் பல அர்த்தங்களை எடுக்கிறானா? சரி, பலபேர் பல அர்த்தங்கள் அல்லது ஒருவரே பல அர்த்தங்கள் என்று எப்படியிருந்தாலும் அப்படி எடுக்கப்படும் அர்த்தம் என்பது அதனளவில் நிறைவடைந்த ஒன்று அல்லவா. அதாவது அது ஒன்றைச் 'சொல்லிவிட்டு'த்தான் அடுத்ததை நோக்கி நகர்கிறது சரியா. அந்த அர்த்தம் ஏகதேசமானதுதான் என்பதையும் நான் ஒத்துக்கொண்டேதான் பேசுகிறேன். உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதென்றால் ஒரு பிரதி பல தூலப் பொருள்களாக உடைந்து சிதறுகிறதுதானே. இந்தத் தூலப் பொருள் பின்னும் பலவாகச் சிதறும் சாத்தியம் இருக்கிறது. இப்போது ஆசிரியனின் நிலைப்பாட்டிற்கு வருவோம். ஒரு பிரதி அதன் வாசகனால் பல பிரதிகளாக உடைக்கப்பட்டு பல தூல உருவங்களைப் பெறுகிறதென்றால் அந்த மூல ஆசிரியனுடைய பிரதியும் அவனுக்கு முந்தின ஏதோவொரு அல்லது பல பிரதிகளின் உடைப்பினால் நிகழும், இன்னும் பலவாக உடையக் காத்திருக்கும் ஒரு தூல வடிவம்தான் அல்லவா? எனில் தான் வாசித்த பிரதிகளிலிருந்து தன் பிரதியாக உருவெடுத்த ஒரு வாசிப்பைப் பூரணமாக்காமலேயே ஒரு ஆசிரியன் அதை வாசகனுக்கு அளிக்கிறானெனில் அதிலிருந்து அதைத் தொடரும் வாசகனுக்கு அது என்ன அர்த்தச் செயல்பாட்டைத் தருவதாக அமையும். நான் சொல்ல வருவது என்னவென்றால் ஆசிரியனின் மரணம் என்பதை நாம் தவறாகப் புரிந்துகொண்டு ஒரு வாசகனின் முயற்சியும் உழைப்பும் ஆசிரியனுக்குத் தேவையில்லை என்கிற மனோபாவத்தை உண்டாக்கிவிட்டோமோ என்பதுதான். இதனால்தான் மாய யதார்த்தம், நான்லீனியர், இத்யாதி வகைகளின்பேரில், வாசகன் பார்த்துக்கொள்ளட்டும் என்கிற மனோபாவத்துடன் படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றனவோ என்கிற சந்தேகம் எனக்கு. சரியாகச் சொல்லியிருக்கிறேனா?
      April 15 at 3:39pm ·  ·  3
    • Ba Venkatesan ஒரு படைப்பிலிருந்து எனக்கான அர்த்தத்தை உருவாக்கிக்கொள்வது ஒரு வாசகனாக என் சுதந்திரம். ஆனால் அதற்காக ஆசிரியன் எனக்குக் கையளிப்பது ஒரு வெற்றுச் சொற்கிடங்குதான் என்றால் அதைப் படைப்பு என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. அதற்கு இத்தனைபேர் எதற்கு மாய்ந்து மாய்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபட வேண்டும்? அகராதியும் நிகண்டும் போதுமே.
      April 15 at 4:02pm ·  ·  4
    • Ba Venkatesan அதற்காக ஒரு பிரதியின் தூல வடிவம் என்றால் புறவுலகின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு என்று நான் சொல்வதாக நீங்கள் எண்ணிக்கொண்டுவிடலாகாது. பிரதிக்குள் கட்டப்படும் ஒரு புனைவுலகம் அதற்கேயான தர்க்க விதிகளோடு (பார்க்க: குந்தேரா வாசகம்) முழுமையாகக் கட்டப்பட்டு விவாதங்களுக்கு/அர்த்த உற்பத்திக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறதா என்பதே சமீபத்திய தமிழ் பிரதியாக்கங்கள் குறித்த என் கேள்வி.
      April 15 at 4:09pm ·  ·  3
    • Thiru Ji ஆவணபடுத்த வேண்டிய விவாதங்கள் பெரிய சாமி பெரியசாமி நடராஜன்
      April 16 at 7:27pm ·  ·  1
    • Periyasamy Periyasamynatarajan இன்னமும்கூட நண்பர்கள் விவாதத்தில் பங்கெடுத்திருக்கலாம்...
      April 16 at 7:46pm ·  ·  1