றியாஸ் குரானா
இன்றைய மாலைப் பொழுது
கதிரவனைப் பிடித்து
ஒளியை சற்று அதிகரித்தேன்
பரவியிருந்த இருளை
மெதுவாகத் துடைத்துவிட்டேன்
காற்று வீசும்படி
மரங்களை அசைத்துவிட்டேன்
மீண்டும் மீண்டும்
பாடிப் பறந்து வரும்படி
பறவைகளைப் பறக்கவிட்டேன்
கண்களை அனுப்பி
இரவை மறைத்துவிடும்படி சொன்னேன்
நீண்ட நேரம்
தாக்குப் பிடிக்க முடியவில்லை
உடைந்தே விட்டது
அந்திப்பொழுதை
சரிசெய்ய முடியவில்லை